எண்டமூரி வீரேந்திரநாத், தெலுங்கு நாவலாசிரியர். இந்தியாவில், ஆந்திர
மாநிலத்தில் இருந்து வந்தவர். அவரது சமூகம் சாரந்த எழுத்துக்கள் இளைய
தலைமுறையினர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது எழுத்துக்களில்
இந்தியாவின் பல முக்கிய சமூக பிரச்சினைகளான பசி வறுமை, தப்பெண்ணங்கள்,
மூடநம்பிக்கைகள், மற்றும் மக்களுக்கு உள்ள சமூக பொறுப்புகள் வெளிப்பட்டன.
அவரது எழுத்திற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது முதல் படத்திலே
சிறந்த வசனம் எழுத்தாளரருக்கான பிராந்திய விருதினை இந்திய ஜனாதிபதியிடம்
இருந்து பெற்றுள்ளார்.