ஐந்து நண்பர்கள் தங்களுக்குள் பந்தயம் வைத்துக் கொண்டு சொல்லும் ஐந்து
விதமான கதைகள் இவை. அந்தர்நேத்ரம்: ராஜனிடம் இருந்த குணாதிசயமே அதுத்தான்.
வெளியிலிருந்து யார் பார்த்தாலும் அவன்தான் நல்லவன் என்பது போல் ஒரு மாயத்
தோற்றத்தை உருவாக்கி விடுவான். சிரித்துக் கொண்டே எதிராளியின் கழுத்தை
அறுக்கும் வித்தை அவனுக்கு நன்றாகவே தெரியும், மனைவியை ஏளனமாக பேசுவது,
மட்டம் தட்டுவது... வெளியில் இருப்பவர்களுக்கு மட்டும் பண்பு மிகுந்தவன்
போல் தென்படுவது. கணவனைப் பற்றிய யோசனைகளிருந்து மீண்டு, அவன் எழுதிய
கடிதத்தை பத்திரமாக வைத்துவிட்டு, கதவைப் பூட்டிக் கொண்டு தபால்
நிலையத்திற்கு சென்று அங்கிருந்து டாக்டர் வில்லியம்ஸுக்கு போன் செய்தாள்.