தன்னுடைய நாடகங்களிலே அவர் கவிதைக்கும் சங்கீதத்துக்கும் அந்தரார்த்த தத்துவ விசேஷத்துக்கும் அளித்த முக்கியம் பாத்திரங்களுக்கோ, கதைகளுக்கோ தரவில்லை அவரால் அப்படி முக்கியத்துவம் தந்து உலகிலே மிகச் சிறந்த நாடாகாசிரியர் என்று பெயர் வாங்கியிருக்க முடியும் என்பதற்குப் போதிய சாட்சி அவருடைய எழுத்திலே இருக்கிறது. ஸதி, கர்ணனும் குந்தியும், மாலினி, சித்ரா போன்ற நாடகங்கள் நாடகங்களகாகவும் நன்றாகவே இருக்கின்றது.