என்னுடைய முதல் தொகுப்பிலிருந்து இக்கதைகள் முற்றிலும் வித்தியாசமானவையாக அமைத்து இருப்பது எனக்கு முதலில் மகிழ்ச்சியைத் தருகிறது. எதற்காக எழுத வேண்டும் என்கிற கேள்வி எப்போதும் என்னுள் கேட்டிருக்கிறேன்,கேட்டுக்கொண்டே தான் இருக்கிறேன். நமக்கு முன்பு அவ்வளவு பக்கங்கள் எழுதப் பட்ட பின்னும் இங்கு இனி எழுதப்படப் போகிறவைகள் தன்னை எப்படி நிலை நிறுத்திக்கொள்ள முடிகிறது என்கிற கேள்விக்கான விடையை எழுதி தான் அடைய வேண்டும் என்று உணர முடிகிறது.