காலத்துகள் களம், மொழி இந்த இரண்டிலும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவர். எது ஒரு கதையை இலக்கியமாக்குகிறதோ, அந்த இடத்தில், எந்த அரிதாரமும் புனைந்துகொள்ளாத அசல் தன்மை கொண்டு, இலக்கியத்தின் மையத்தை அவருடைய எழுத்துக்கள் கைப்பற்றி விடுவதைப் பார்க்கலாம். அதில் அவர் அடையும் வெற்றியே வாசிக்கத்தக்கவர். விமரிசனத்துக்கு உரியவர் என்ற தகுதி அளிக்கிறது.