பிரான்சில் வாழும் திரு. கி. பாரதிதாசன் அவர்கள் திருக்குறளில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாகத் திருக்குறள் அரங்கம் என்ற பெயரில் மாதந்தோறும் திருக்குறள் சார்ந்த நிகழ்வினை நடத்தி வருகின்றார். அங்குள்ள தமிழ் ஆர்வலர்கள் ஒன்றுகூடி எடுக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் பிரான்சு நாட்டில் தமிழ் வளர்சிக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும் பயன் நல்கும். இத்தகு முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். திருக்குறள் அரங்கம் தொடர்ந்து தமிழ்மறை பரப்பட்டும்.