பேராசிரியர் இலக்குவனார் திருக்குறளுக்கு உரை வரைந்துள்ளார். அறிவுப் பூர்வமாகச் சிந்திக்க வைத்துள்ளார். காலத்துக்கேற்ற உரையாகவும் உள்ளது. தமிழ் உணர்வாளர். அவர் நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரி முதல்வராக இருந்த போது திருக்குறளை யானை மீது வைத்த திருக்குறள் ஊர்வலம் நடத்தியவர். தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். மாணவர் ஆற்றுப்படை எழுதியவர். சங்க இலக்கியப் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பத்திரிகை நடத்தியவர். தமிழ்மொழிக்கு ஆபத்து வந்த போதெல்லாம் அதன் பாதுகாப்புக்குக் குரல் கொடுத்த களப்போராளி. அவருடைய இந்தத் திருக்குறள் உரை பலரையும் சிந்திக்க வைக்கும் சிறப்புடையது.