கண்ணகி குறித்த பல மரபுக் கதைகள் கேரளப் பாரம்பரியத்திலும், கலை மற்றும் பண்பாட்டுத் தளத்திலும் செல்வாக்குப் பெற்று விளக்குகிறது. தொடக்க காலத்தில் கண்ணகிக் கோட்டமாக இருந்தவை யாவும் காளி கோயிலாகவும் பகவதிக் காவுகளாகவும் மாறியுள்ளன. இந்நூல் சிலப்பதிகாரத்தை இத்தகைய நோக்கில் ஆராய்ந்து உள்ளது. கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் 2023இல் நடத்தப்பெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் விளக்குகிறது. இதில் 13 கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவற்றுள் இறுதியான இரு கட்டுரைகள் மலையாள மொழியில் அமைந்தவை.