book

மரணத்தை வெல்லுங்கள்

Maranathai Vellungal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

உலகின் பிறப்பு என்று ஏற்பட்டதோ அன்றே இறப்பும் நிச்சயிக்கப்பட்டுவிட்டு. இது விதியும் நியதியும் ஆகும்.

நாம் ஒவ்வொருவரும் இறையம்சத்தின் துளிகள்தான். அதை நாம் உணருவதில்லை.

ஆதி சங்கர்ர், திருமூலர், இராமலிங்க சுவாமிகள், வள்ளுவர் போன்ற மஹான்கள் கூறிய வழிமுறைகளை அறிந்ததன் மூலமாகவும், நான் குமரி முதல் இமயம் வரை சென்று பல்வேறு யோகிகளையும், சித்தர்களையும் சந்தித்ததின் பயனாகவும், கிடைத்தற்கரிய மரணமிலா பெருவாழ்வின் இரகசியங்களை பெற்றேன். அங்ஙனம் பெற்றவற்றை மகள் உய்யும் பொருட்டு உங்களுடன் இந்நூலின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.


ஞானத்தில் ஊறிய மஹான்களும், பிறவி என்ற பெருங்கடலை நீந்திய சித்தர்களும், நமது சித்தம் தெளிய மருந்தளித்த யோகிகளும் போட்டுக் கொடுத்த கோட்டினை நான் ரோடாக போட்டு உங்களை சிரம்மின்றி இந்நூலின் மூலமாக அழைத்துச் செல்கிறேன்.

எந்த கணமும் மரணம் வரும் என்ற பொது விதியிருந்தாலும், அதையே நினைத்து வாடாமலும், வரட்டு வேதாந்தம் பேசாமலும் ஆன்றோர்கள் கூறிய வழிமுறையை பின்பற்றி மரணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே அதனுடன் இனிதே வாழ்வோம்.  இயற்கையோடு இணைந்து இன்புற்று நாமும் பயணிப்போம்.

- சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி