book

பதினனண் கீழ்க்கணக்கு நூல் ஐந்திணை ஐம்பது மூலமும் உரையும்

Pathinen Keezhkkanakku Nool Ainthinai Aimpathu Moolamum Uraiyum

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாறன் பொறையனார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :60
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், காவியம்
Out of Stock
Add to Alert List

பண்புள்ளி நின்ற பெரியார் பயன்றெரிய வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த வைந்திணை யைம்பது மார்வத்தி னோதாதார் செந்தமிழ் சேரா தவர்.  (இதன் பொருள் ) வண்மை - மெய்ம்மையான , புள்ளி - இலக்கப் புள்ளியிடுவதாகிய கணக்கிற் றேர்ச்சியுள்ள ,மாறன்  பொறையன் -மாறன் பொறையன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற புலவர் பெருமான், பண்பு  - மக்கட் பண்புகளை ,உள்ளிநின்ற - ஆராய்ந்தறிய அவாவிக் கெண்டிருக்கும் படியான, பெரியார் - உயர்ந்தோராகிய உலகமக்கள் ,பயன் - நூற்பயனாகிய அகப் பொருள்களின் நுட்பங்களை, தெரிய - நன்குணரும்படியாக, புணர்த்து -அகப்பொருட்டுறைகள் பலவற்றைச் சேர்த்து,யாத்த - செய்யுள் வடிவமாக இயற்றிய, ஐந்தினை ஐம்பதும் -குறிஞ்சி,முல்லை,மருதம், பாலை நெய்தல், என்ற ஐந்தொழுக்கங்களினையும் தம்முள் அமைத்துக் கொண்டுள்ள ஐந்தினை ஐம்பது ஆகும்.