
ஐந்தாம் பிறை - அடுத்த இலக்கு (இரண்டு நாவல்களின் தொகுப்பு)
₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :241
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789390771042
Add to Cartஐந்தாம் பிறை
பொதுவாய் அமாவாசை கழிந்த மூன்றாம் நாள் நிலா தன்னுடைய முகத்தை ஒரு மெல்லிய வளைந்த கோடாய் மேற்குத் திசையில் காட்டும் . அதற்கு மூன்றாம் பிறை என்று பெயரிட்டு அதைப் பார்ப்பதையே அதிர்ஷ்ட நாளாய்க் கருதுகிறோம் . இந்து மதம் மட்டுமல்ல , மற்ற மதங்களும் மூன்றாம் பிறையைக் கொண்டாடுகின்றன . ஆனால் இந்த நாவலில் நிலவின் ஐந்தாம் பிறைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு , விபரீதமான நிகழ்வுகள் நடக்கின்றன . கதையில் எத்தனையோ கதாபாத் திரங்கள் உலா வந்தாலும் முக்கியமான கதாபாத்திரம் இந்த ஐந்தாம் பிறைதான் . எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா .. ? நாவலைப் படியுங்கள் ! ஆச்சர்யப்படுங்கள் !!
அடுத்த இலக்கு
இந்த உலகில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அது எப்படிப்பட்ட சம்பவமாக இருந்தாலும் சரி ... பணம் , பெண் , பகை - இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் அடங்கிவிடும் . ஆனால் இந்த ‘ அடுத்த இலக்கு ’ நாவலில் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணம் மேற்சொன்ன மூன்றும் அல்லாமல் வேறு ஒரு காரணம் . அதுவும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணமாக இருப்பதுதான் வியப்பான ஒரு விஷயம் . கதையின் முடிவு உங்களுக்கு அதிர்ச்சி யைக் கொடுத்தாலும் , அது இன்ப அதிர்ச்சியாகவே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
