
பீரங்கிப் பாடல்கள்
₹600
எழுத்தாளர் :இரா. முருகன், என்.எஸ். மாதவன்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of StockAdd to Alert List
எட்வினே, நீர் பிரியாணி செய்ய எங்கே கத்துக்கிட்டீர்?
எங்க அப்பன்கிட்டேதான். இல்லாம வேறே எங்கே? சாட்சாத் வெடியிறைச்சி விந்தாலு தோபியாஸ் பக்கத்திலேயே இருந்துதான். அப்பனுக்கு பிரியாணி செய்யறதோட தியரியும் தெரியாது. பிராக்டிகலும் தெரியாது. ஒரு பாரசீகத்தான் அவருக்கு அதை கத்துக்கொடுத்தான். பிரியாணிக்கு ரெண்டு பாணி உண்டுன்னு அப்பன் சொல்லிக் கேட்டிருக்கேன். முதலாவது வடக்கு பாணி. லக்னோ ஸ்டைல். இறைச்சியும், சோறும் தனித்தனியா வேகவச்சு அசெம்பிள் செய்து தம் வச்சு பிரியாணி செய்யறது. இன்னொண்ணு தெற்கு பாணி. தெற்கிலே நிஜாம் நாடு, ஹைதராபாத் ஸ்டைல். எல்லாத்தையும் அவியல் மாதிரி ஒண்ணாப் போட்டு வேகவிடுவாங்க. நாம இங்கே செய்யறது வடக்கு ஸ்டைல் பிரியாணி.
