
விரைவில் வருவேன்... விக்ரம பாண்டியரே! (நான்கு பாகங்கள்)
₹1600
எழுத்தாளர் :கி. லோகநாயகி
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :1558
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
விரைவில் வருவேன்…விக்ரம பாண்டியரே!’ என்ற இந்த புதினத்தை எழுதிய எழுத்தாளர் ‘கி.லோகநாயகி’ அவர்கள் கோவையைச் சேர்ந்தவர். தனது பள்ளி, கல்லூரி நாட்களிலேயே நிறைய பேச்சுப்போட்டி. கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி இவற்றில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றவர். பிற்பாடு “பாரத ஸ்டேட் வங்கியில் சேர்ந்து, பின் துணை மேலாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வில் பணியை நிறைவு செய்துகொண்டார்.
அதன் பின்னர் குடும்ப பொறுப்புகள் பல இருப்பினும், எழுத்தின் மேலுள்ள ஆர்வத்தால் இந்தப் புதினத்தை மிகுந்த சிரத்தையுடன் எழுதியுள்ளார். ஏற்கனவே முதுகலை படிப்பு படித்து முடித்திருந்தாலும், வரலாற்று நாவல் எழுத வேண்டும் என்ற உந்துதல் தனக்கு ஏற்பட்ட பிறகு, மூன்று வருடங்களுக்கு முன்தான் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
