book

திராவகம் சிதைத்த வாழ்வு

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ப. கற்பகவள்ளி
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :26
பதிப்பு :1
Published on :2018
Add to Cart

பெண்ணைத் தெய்வமாக்கியது ஆன்மிகம் பெண்ணைத் தாசியாக்கியது நிலப்பிரபத்துவம் பெண்ணை அடைமையாக்கியது  வைதீகம் பெண்ணை வேலைக்காரியாக்கியது குடும்பத்துவம் பெண்ணை மனுசியாக்கியது பெரியாரியம்  என்பார், அண்மையில்  மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன். சங்க காலத்தில் பெண்கள் சக மனுசிகளாகத்தான் பார்க்கப் பட்டிருக்கிறார்கள்.  அன்று  பெண்கள் படித்தவர்களாகவும்  இருந்திருக்கிறார்கள். சங்க இலக்கியத்தில் மட்டுமே முப்பதுக்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்களின் பாடல்களைப் பார்க்க முடிகிறது. இடைக்காலத்தில்தான் பெண்களின் மதிப்பு சரியத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மேலும், மேலும் பாதிப்புகள் அதிகரித்து அவர்களின் நிலை மீளவே முடியாத அளவிற்குச் சென்று விட்டது.