book

திருவள்ளுவ நாயனார் கற்பம் 300

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். முருகேசன்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம்
Add to Cart

கற்பம் என்பதற்கு ஊழிக்காலம் எனப் பொருள். இந்த ஊழிக்காலம் என்பது மிக நீண்ட காலம். உடலை பிணி,மூப்பு ஏற்படாமல் மனித உடலை அழியாத கற்ப தேகமாகமாற்றும் அரிய வித்தையினைச் சில சித்தர் பெருமக்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள். இவ்வாறு சித்தர்கள் தம் உடலைக் கற்ப தேகமாக மாற்றிக் கொண்டமைக்கு அவர்கள் அருளிச் செய்த பாடல்களே சான்றாகும்.

இவ்வாறாக கற்பம் பற்றிய பாடல்களை போகர், கொங்கணர், சட்டைமுனி, சூரியானந்தர், கோரக்கர், காலாங்கிநாதர், புலஸ்தியர், திருவள்ளுவர் ஆகியோர் பாடியுள்ளனர். திருவள்ளுவர் தவிர மற்ற சித்தர்கள் அருளிய கற்பம் ஏற்கெனவே சித்தர்களின் கற்ப சூத்திரம் நூலில் தொகுத்துத் தந்துள்ளோம்.