book

உலகப் புகழ் பெற்ற டால்ஸ்டாய் சிறுகதைகள்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :125
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353679
குறிச்சொற்கள் :உணர்வுகள், பாசம், நட்பு, காதல், சோகம், மிருகங்கள்
Out of Stock
Add to Alert List

உலகப் புகழ்பெற்ற ரஷ்ய இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய நீதிக் கதைகளின் தொகுப்பு இந்த நூல்.

மகத்தான அக்டோபர் புரட்சி (ரஷ்யப் புரட்சி)யின் நாயகன் மேதை லெனின் அவர்கள் டால்ஸ்டாயை நிகரற்ற உலகக் கலைஞன் என்றும் ரஷ்யப் புரட்சியின் கண்ணாடி என்றும் மதிப்பீடு செய்தார். இவர் இந்திய மக்களின் நண்பர். மகாத்மா காந்தி இவரை தமது குரு என்று கருதினார். தென்னாப்பிரிக்கவில் நிறக்கொடுமைக்கு எதிராக காந்திஜியின் தலைமையில் நடந்த சாத்வீகப் போராட்டத்திற்கு தமது ஆதரவை டால்ஸ்டாய் நல்கினார். தாம் நிறுவிய பண்ணையை டால்ஸ்டாய் பண்ணை என்றே காந்திஜி அழைத்தார்.

இந்த தொகுப்பில் தனி இடத்தைப் பிடித்துள்ளது புள்ளிக்குதிரை. மிருகங்களுக்கும் பல்வேறு உணர்வுகள் - தாய் - சேய் பாசம்,நட்பு,காதல்,சோகம் - உள்ளன என்பதை ஆசிரியர் உருக்கமாக எழுதியுள்ளார். ''புள்ளி குதிரையின் வாழ்க்கையைப் பற்றி அது எதிர்கொள்ளும் சோதனைகள் பற்றி நம் அனுதாபத்தைத் தூண்டும் முறையில் இக்கதை அமைந்துள்ளது. மிருகங்களை அன்பாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை இக்கதை ஏற்படுத்தும்.