ராஜி மாமி சமையல்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஸ்வரி சந்திரசேகர்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :102
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788184027624
Add to Cartசமையலறையில் கடலை மாவில் நீந்திக் கொண்டிருக்கும் சுதாவை சபித்துக் கொண்டே குளிப்பாட்டுங்கள்.
“தாகம், தண்ணீர்” என்று கேட்டு வரும் பத்ரிக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுங்கள். சிதறி இருக்கும் மாவைத் திரட்டுங்கள். புரை ஏறிய பத்ரியின் தலையில் தட்டுங்கள். அவன் கையிலிருந்த டம்ளர் குலுங்கி, தண்ணீர் மாவின் மீது கொட்டிய பகுதியைத் தனியே எடுத்து விடுங்கள்.
சமையல் குறிப்புப் புத்தகத்தைப் புரட்டவும். 87-லிருந்து 102-ம் பக்கம் வரை கிழிந்திருப்பதைப் பார்த்து பல்லைக் கடிக்கவும். “மைசூர்பாகு செய்முறை 94-ம் பக்கம்னு போட்டிருக்கு. அந்த பக்கத்தை கிழிச்சி போட்டிருக்கிறதுகள் பூதங்கள்... ஆண்டிச்சி பெத்தது ஐந்தும் குரங்குகள்” என்று சொல்லிக்கொண்டே தலையில் அடித்துக் கொண்டு விட்டு, அடுப்பில் வாணலியைப் போட்டு விட்டு கேஸ் அடுப்பைப் பற்ற வைக்கவும். பக், பக் என்று நாலு தடவை துடித்து விட்டு அடுப்பு அணைவதைப் பார்த்து, “அடப்பாவமே, காஸ் கோவிந்தா?” என்று வெங்கடாசலபதியைக் கூப்பிட்டு அலுத்துக் கொண்ட பிறகு, கிரஸின் ஸ்டவ்வைப் பற்ற வையுங்கள்.
பின்கட்டு மாமியிடமிருந்து ஸ்டவ் பின்’ வாங்கி வர ராஜியைத் துரத்துங்கள். ராஜி வெறும் கையுடன் வந்ததும்,‘கேட்டை, மூட்டை, செவ்வாய்’ என்று முணுமுணுத்துக் கொண்டே, ”அறுந்த கைக்கு சுண்ணாம்பு தர மாட்டாளே?” என்று பின்கட்டு மாமியை சபிக்கவும். ஸ்டவ்வை பற்ற வையுங்கள். வாணலியை எடுத்து அடுப்பில் வையுங்கள். ஒரு மூலையாக எரிவதைப் பார்த்து ‘கர்மம்’ என்று ஸ்டவ்வைத் திட்டுங்கள்.
“தாகம், தண்ணீர்” என்று கேட்டு வரும் பத்ரிக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுங்கள். சிதறி இருக்கும் மாவைத் திரட்டுங்கள். புரை ஏறிய பத்ரியின் தலையில் தட்டுங்கள். அவன் கையிலிருந்த டம்ளர் குலுங்கி, தண்ணீர் மாவின் மீது கொட்டிய பகுதியைத் தனியே எடுத்து விடுங்கள்.
சமையல் குறிப்புப் புத்தகத்தைப் புரட்டவும். 87-லிருந்து 102-ம் பக்கம் வரை கிழிந்திருப்பதைப் பார்த்து பல்லைக் கடிக்கவும். “மைசூர்பாகு செய்முறை 94-ம் பக்கம்னு போட்டிருக்கு. அந்த பக்கத்தை கிழிச்சி போட்டிருக்கிறதுகள் பூதங்கள்... ஆண்டிச்சி பெத்தது ஐந்தும் குரங்குகள்” என்று சொல்லிக்கொண்டே தலையில் அடித்துக் கொண்டு விட்டு, அடுப்பில் வாணலியைப் போட்டு விட்டு கேஸ் அடுப்பைப் பற்ற வைக்கவும். பக், பக் என்று நாலு தடவை துடித்து விட்டு அடுப்பு அணைவதைப் பார்த்து, “அடப்பாவமே, காஸ் கோவிந்தா?” என்று வெங்கடாசலபதியைக் கூப்பிட்டு அலுத்துக் கொண்ட பிறகு, கிரஸின் ஸ்டவ்வைப் பற்ற வையுங்கள்.
பின்கட்டு மாமியிடமிருந்து ஸ்டவ் பின்’ வாங்கி வர ராஜியைத் துரத்துங்கள். ராஜி வெறும் கையுடன் வந்ததும்,‘கேட்டை, மூட்டை, செவ்வாய்’ என்று முணுமுணுத்துக் கொண்டே, ”அறுந்த கைக்கு சுண்ணாம்பு தர மாட்டாளே?” என்று பின்கட்டு மாமியை சபிக்கவும். ஸ்டவ்வை பற்ற வையுங்கள். வாணலியை எடுத்து அடுப்பில் வையுங்கள். ஒரு மூலையாக எரிவதைப் பார்த்து ‘கர்மம்’ என்று ஸ்டவ்வைத் திட்டுங்கள்.