book

பாரதி செல்லம்மாள் உயில்

Bharathi Chellammal Uyil

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ. திவான்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :42
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123426679
Add to Cart

கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். "செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். "நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார்.

"கரும்புத் தோட்டத்திலே' என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம். பாரதியார் அறியாத கலை, "பணம் பண்ணும் கலை". என் கணவர் மறந்தும் காசுக்காகத் தமிழ்த்தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாக்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆற அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ, பகலோ, வீட்டிலோ, வெளியிலோ, கடற்கரையிலோ அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்''.

செல்லம்மா பாரதியின் இந்த உரையைப்போல, பல அறிஞர்களின் உரைகள் வானொலியில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவை புத்தகங்களாகவும், குறுந்தகடுகளாகவும் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.”