book

மக்கள் வாழ்வில் மரங்கள்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.வி.வி. ஆனந்தம்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :418
பதிப்பு :2
Published on :2014
Out of Stock
Add to Alert List

மரங்களால் சுற்றுச்சூழல்வளமாகும் மனித வாழ்வு நலமாகும். மரம் வளர்க்க மழை பொழியும்; மழை பொழிய வறுமை ஒழியும்.ஆளுக்கொரு மரம் நடுவோம் மண்ணில் வாழ; நாளை மண்ணை மகிழ்வாய் ஆள.
மரம் மனிதனின் மூன்றாவது கரம். இரு கைகளைக் கடந்து இயற்கையைக் காக்கும் மூன்றாவது கரமாக உள்ளது மரம். சுற்றுச் சூழலைச் சுகமாய் காப்பதில் மரங்கள் முதன்மையான காரணியாக விளங்குகின்றன. மரங்கள் பூக்கும் போதெல்லாம் மனித மனங்களும் பூக்கின்றன. ஆதி மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த போது இன்பமாக வாழ்ந்தான். மனிதன் நிர்வாணமாக இருந்த போது, மரம்தான் தன் இலைதழைகளை, மரப்பட்டைகளை ஆடையாகக் கொடுத்து மானம் காத்தது.
நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இன்று மரங்கள் அழிக்கப்பட்டு இயற்கை நிர்வாணமாகி வருகிறது. மரங்கள் அதிகளவு இருக்கும் வரை சுற்றுச்சூழல்சுகமாக இருக்கும். மரங்கள் அழியத் தொடங்கும் போது மனித சமுதாயத்தின் அழிவும் தொடங்கிவிடும்.