book

வசந்த காலம்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாண்டில்யன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சரித்திர நாவல்
பக்கங்கள் :120
பதிப்பு :23
Published on :2018
Add to Cart

மந்திர மலையின் பெரும்பாறைகளின் மீது மாலைக் கதிரவன் வீசியிருந்த பொற்கிரணங்களை மெள்ள மெள்ள அழித்துவிட்ட இருள், எங்கும் கருமையைப் பூசிவிட்டதால், பகலிலேயே பயங்கர மாகத் தோற்றமளிக்கும் அந்த மலைப்பிராந்தியம் சித்திரைத் திங்களின் அந்த இரவில் குலை நடுக்கம் எடுக்கக்கூடிய சூழ்நிலையில் சிக்கிக் கிடந்தது. மாலை வேளையில் அதன் பாறை உச்சிகளில் தொங்கித் தவழ்ந்து கொண்டிருந்த ஓரிரண்டு வசந்த கால வெண்ணிற மேகங்கள் இருள் கவியக் கவிய லேசாக கருநிறம் பெற்று, சின்னஞ் சிறிய பிசாசுகளைப் போல் மலையடிவாரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.