book

மானிட உளவியல்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாஞ். இராமலிங்கம்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :156
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

உளவியல் முதுகலை பயின்றவுடன் வெளியிடப்பெற்ற மானிட உளவியல் (1989) நூல், தற்பொழுது ஆசிரியர்களுக்கு உளவியல் கற்பிக்கும் நிலையில் செம்மைபெற்ற பதிப்பாக வெளிவருகிறது. ஆசிரியருக்குப் பயிற்றுவித்தல் என்பது மறைமுகமாக மாணவர்களுக்குத் தேவையானவற்றை ஆசிரியர்களின் மூலம் அளிப்பதாகும். மாணவர்களின் நடத்தை, புரிந்துகொள்ளும் தன்மை, கற்கும் திறன் சமூகத்தில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு சவால்களை எதிர்கொள்வது போன்ற நிலைகளில் உளவியலின் பயன்பாடு எவ்வகையில் உள்ளது என்பதைத் தினமும் ஆராய்ந்து அறிந்து வருகிறோம்.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உளவியல் கல்வி பிறருக்கும் பயனளிக்குமா என்பதன் விளைவே இந்நூல். மானிடராகப் பிறந்த ஒவ்வொருவரும் தம்மைப் புரிந்து கொள்வதற்கும் குடும்பம், சமூகம் என அனைத்துச் சூழல்களிலும் பொருத்தப்பாடுடையவர்களாக இருப்பதற்கும் உளவியல் அவசியம்.
இந்நூல் உளவியல் ஆதாரக் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வி பயின்றோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.