book

வள்ளலார் அருளிய திரு அருட்பா பெருநூல் பகுதி

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

அழைப்புகளும் அறிவிப்புகளும் கட்டளைகளுமாகக் கிடைத்துள்ளவை 18. இவை அடிகள் வடலூரிலும் மேட்டுக்குப்பத்திலும் எழுந்தருளியிருந்த காலத்தில் (வடலூரில் சத்திய தருமசாலை தொடங்கிய 1867 முதல் மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் சித்தி பெற்ற 1874 வரை எட்டாண்டுகளில்) அருளப் பெற்றவை. அடிகள் நிறுவிய ருளிய சன்மார்க்க சங்கம், சத்தியதருமசாலை, சத்திய ஞான சபை, சித்திவளாகம் ஆகிய நான்கு சன்மார்க்க நிலையங்களைக் குறித்தும் நிறுவத்திட்டமிட்டிருந்த மற்றும் சில நிலையங்களைக் குறித்தும் இவை அருளப் பெற்றனவாகலின், நிலையங்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கொள்கை விளக்கங்கள் பற்பல இவற்றால் தெளிவாக அறியப்பெறுகின்றன. இவற்றுள் 'சபை விளம்பரம்' ஒன்று மட்டும் 'அற்புதப் பத்திரிகை' என்ற தலைப்புடன் 1885-ஆறாம் திருமுறை முதற்பதிப்பில் வெளியாயிற்று. ஏனைய பதினேழும் பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பில்தான் முதன் முதலாக அச்சாயின. இவற்றைப் பத்திரிகைகள், கட்டளைகள் என இருவகையாகப் பிரித்துப் பத்திரிகைகள் என்ற தலைப்பின் கீழ் ஐந்தையும் கட்டளைகள் என்ற தலைப்பின் கீழ் பத்தையும் காலவரிசைப்படி ஆ.பா. அமைத்திருக்கிறார். யாம் பதினெட்டையுமே ஒரு தொகுதியாக்கிக் காலவரிசைப்படி அமைத்துள்ளோம்.