சுமார் மூஞ்சிகுமாரு ... சூப்பர் பிகரு பாரு ... கதை தான் ... மாலை நேரத்து
மயக்கம் படத்தின் மொத்த கதையும்! அதாகப்பட்டது, .,பெற்றோர் பேச்சை மீறாத
பிரபு காதல் , காதலி கிட்டாததால் பெரியோர் , பெற்றோர் பார்த்து நிச்சயித்து
சேர்த்து வைத்த மனோஜாவை மணம் முடித்து மனைவியாக்கி கொள்கிறார்.
பிரபு எனும் அறிமுக நாயகர் பாலகிருஷ்ண கோலாவும் , மனோஜா எனும் அறிமுக
நாயகி வாமிகாவும். . கணவன் - மனைவியாக வாழ ஆரம்பிப்பதற்கு முன்பே
வாடிப்போகின்றனர். இருவரும் பர்ஸ்ட் நைட்டும், பல நைட்டும் முடிக்காமல்
இரண்டு வருடங்கள் ஒரே வீட்டில் வெவ்வேறு படுக்கையில் பெற்றோருக்காகவும்
ஒன்றாகவே வாழ்கின்றனர்.
ஒரு நாள் இரவு புருஷன், பொண்டாட்டி ஒப்புதல் இல்லாமல் புல் போதையில்
மனைவியை ரேப் செய்கிறார். இதில் கடுப்பாகி புருஷனை வெறுத்து ஒதுக்கும்
மனைவி., கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார் .