தென் ஆப்பிரிக்க கருப்பர்களின் விடுதலைப் போர் இரத்தத்தாலும், கண்ணீராலும் ஆனது. ஒடுக்குமுறையின் உச்சமாக சொந்த நாட்டிலேயே அவர்கள் அடிமையாக்கப்பட்டு அகதிகளாய் நடத்தப்பட்டார்கள். வெள்ளையர்களாலான தென் ஆப்பிரிக்க ஒன்றிய அரசு கருப்பர்களை அவர்களின் நிலங்களிலிருந்து விரட்டியடித்து, நகரங்களை நோக்கி இடம் பெயரச் செய்தது.சுரங்கங்களில் வேலைக்கமர்த்தி, குறைந்த கூலி கொடுத்து, கருப்பர்களை கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கியது.