இந்த நாடகத்தின் கரு எனது தலைமுறை மாற்றம் நாவலின் கருவாகும். அது மூன்று தலைமுறைகளைப் பற்றியது. நாடகத்துறை எனக்கு புதியதாகும். அது பற்றிய எந்த விதமான நாடகக்கலை ஞானமோ, நுணுக்கமோ அறிந்தவனில்லை.இன்றைய தமிழ் நாடகத்துறை என்பது பொழுது போக்கு என்கிற பேரால் அபத்தமான நகைச்சுவை என்கிற கேலிக்கூத்தும், புராண இதிகாசப் பேத்தல்களும், பண்பும் அறநெறிகள் பேசும் சமூக அக்கறையற்ற பாசாங்குத்தனமான பிற்போக்குத் தனங்களை மெருகிட்டுக் கொடுக்க கூடிய அவல நிலையைத்தான் காண முடிகிறது.