பெரும்பாலும் நான் எழுதி வெளிவந்த புத்தகங்கள் அனைத்துமே ஒலிப்பதிவு நடக்கின்ற நேரத்தில் கிடைத்த ஓய்வுப் போதில் - வெறுமனே குறித்து வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதியவைகள்தான். இந்த நூலும் அதுபோலவே. இதில் இடம்பெறும் ஒன்றிரண்டு கட்டுரைகள் தவிர- மற்ற அனைத்தும் எழுதப்பட்டு எட்டு வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. நடந்த நிகழ்வுகளை அவ்வாறே குறித்து இருக்கிறேன். எந்த விதமான ஆடை அலங்காரமும் இல்லை.