"காட்டின் மீது மனிதன் கொண்ட அவநம்பிக்கை தான் அதன் அற்புதங்களிலிருந்து அவனை துண்டித்துவிட்டது. மனிதன் தனது சிருஷ்டி பற்றி அத்தனை கர்வம் கொள்ளுமளவு எதையும் சாதித்து விடவில்லை. இயற்கை மிகுந்த மர்மமானது. அதன் வசீகரமே தீராத மௌனம் தான். அந்த மௌனதின் அடியில் எத்தனையோ அற்புதங்கள் புதையுண்டு இருக்கின்றன"