தமிழ்நிலம் முழுமைக்குமான ஆதிக்கடவுள் முருகனை மெல்ல மெல்ல தமிழ்ப்பரப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒதுக்கி வைத்து,விநாயகனை தமிழ்ப்பரப்பு முழுமைக்குமான பொதுமைப்படுத்தப்பட்ட கடவுளாக மாற்றுவது .அப்படியான ஒரு பிம்பத்தை கட்டமைக்கும் போது அது எளிய தன்மையுடனோ,எளிய மானுட உருவத்துடனோ சித்தரிக்காமல்,எளிய மக்களிடையே எதிர் வாதங்கள் எழும்பாமல் அச்சுறுத்தும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.மட்டுமல்லாது,தங்களது வைதீகக் கருத்துகளை ஓங்கி ஒலிக்கும் வல்லமையுடனும் ஒளிர வேண்டும்.