உலக அரங்கில் முதன் முதலாக தமிழ் ஒலித்தது 2008 -ஆம் ஆண்டில்தான். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அதிபர்
ராஜபாக்சே தமிழில் பேசினார். அப்பாவித் தமிழர்களை அதிக எண்ணிக்கையில் அழித்த இவர் தமிழில் பேசியது அதிசயமான உலக சாதனையாகும். தினமும் ஊக்கம் குறையாமல் பயிற்சி செய்தால் ஒரே ஒலிம்பிக்கில் எட்டுத் தங்கப்பதக்கங்களை அதுவும் ஏழு உலக சாதனைகளுடன் வெல்லமுடியும் என்று நிரூபித்தவர் அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ். இதை 2008 -ஆம் ஆண்டு பீஜீங் ஒலிம்பிக்கில் பெல்ப்ஸ் நிரூபித்துக் காட்டினார் . இது மட்டுமா இது போன்ற சுவையான பொது அறிவுத் தகவல்களும், தன்னம்பிக்கையையும், வாழும் முறையையும் புதுப்பிக்கும் அரிய தகவல்களும் இந்த நூலில் உள்ளன. இந்த அரிய தகவல்களைஎந்த அளவு நினைஇல் வைத்துப் பயன்படுத்தினாலும் அனைத்து வயதினருக்கும் உறுதியாக வெற்றி உண்டு.
- கே ,எஸ் . சுப்ரமணி.