பெண் என்பவள் மகளாக, மனைவியாக, தாயாக இருந்து பல கடமைகளை செய்பவள். பெண்ணின் அருமை அறிந்து தான் மகாகவி "மங்கையராக பெருமைகளை அறிந்து தான் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்று கூறியுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பெண்களுக்காக அவர்களுக்கு பயன்படும் பல குறிப்புகள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டின் சுத்தம், செல்வாக்கு என்பது அவ்வீட்டின் பெண்களை பொருத்தே அமைகிறது. தன் கணவன் மற்றும் பிள்ளைகளின் மனம் அறிந்து அதற்கேற்ப சமைப்பது, அவர்களை பராமரிப்பது என்பது பெண்களின் கடமை ஆகும். எனவே அதற்கு தேவையான சமையல் குறிப்புகள், மேலும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகள், தங்கள் குழந்தைகளை பராமரிப்பதற்கான சில ஐடியாக்கள், சில பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் இப்படி பல வகைகளில் பெண்களுக்கு தேவையான முக்கியமான குறிப்புகள் இந்நூலில் கொடுக்கப்பட்டது. எனவே வீட்டின் கண்களாகிய பெண்கள் இந்நூலை வாங்கி படித்து பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.