ஓஷோவைப் பற்றி, அவருடைய அழகான சமூகத்தை விட, வாசகர்கள் அதிகமாகத் தெரிந்து வைத்திருப்பதுதான், ஆச்சரியமான உண்மை. அதிலும், குறிப்பாக இந்த நூல், அவருடைய வாசகர் வட்டத்தை, பெருமளவில் அதிகப் படுத்தப் போவது நிச்சயம்.
ஓஷோவின் வசீகரப் பேச்சுகளுக்கும், சமூகம் மற்றும் தன்னை - மாற்றம் குறித்தான அவருடைய துணிச்சலான பரிசோதனைகளுக்கும், அவருடைய ஞானத்திற்கும், அவருடைய நகைச்சுவைகளுக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
அவர் எந்தப் பொருளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந் தாலும் ஆங்காங்கே நகைச்சுவைக் கருத்துகளும், குட்டிக்கதைகளும், வெடித்துக்கொண்டே இருக்கும். அவருடைய ஆனந்தம் என்பது, மற்ற எல்லாவற்றையும்விட முதன்மை யானது.