எட்டு வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள குழந்தைகளைக் கையாள்வது, பதினான்கு முதல் பதினெட்டு வரை உள்ள குழந்தைகளைக் கையாள்வதைவிட எளிதானது என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால், இந்த இரண்டு பருவ காலக் கட்டத்தில் உள்ளவர்களையும் வளர்ப்பது எளிதல்ல. இரண்டுமே பெற்றோர்களுக்கு சவால் விடும் பருவம். இளம் வளர் பருவத்தில் ஏற்படும் தாக்கம் கண்டிப்பாக வளர் பருவத்தை பாதிக்கும். சரியான அணுகுமுறை இல்லாத குழந்தை வளர்ப்பு வெளியிடத்தில் அவர்களை ஈர்க்கும் விஷயங்களில் அவர்களை ஈடுபடச் செய்துவிடும். இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. அதற்கான வழிமுறைகளை சொல்லித் தருகிறது இந்த நூல்.