உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் வெற்றியாளனாக முடியும். ஒருவர் வெற்றியாளனாக வாழ்கிறார் என்றால் இலட்சியங்களில் தெளிவு, உழைப்பதில் அக்கறை, தடைகளைத் தாண்டுவதில் விடாமுயற்சி ஆகிய மூன்றிலும் கவனம் செலுத்துபவராக இருப்பார். இந்த மூன்று அம்சங்களுடன் இறைவனின் அருளும் இருந்தால் அவர் விரைந்து வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலியே இதனால்தான் இறைவனின் ஸ்பரிசம் அனைத்தையும் சாதிக்கும் என்பார் ஶ்ரீ அரவிந்தர். எண் கணிதம் மூலம் நம்முடைய அதிர்ஷ்ட எண் எது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப நம்முடைய பெயரை அதிர்ஷ்ட எண்ணில் அதிர்ஷ்டப் பெயராக வைத்துக்கொண்டால் போதும். எப்போதும் வெற்றி, மகிழ்ச்சி, உடல்நலம், செல்வ வளம் போன்றவை தொடரும்.