சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை கொண்டாடி மகிழும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி’ என்னும் பழமையும் இலக்கிய வளமும் நிறைந்த தமிழ்க் குடிமக்கள், சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங்காலமாய்க் கொண்டாடி மகிழ்கின்றனர்.