இந்து சமயம் வாழ்வியல் முறையில் நாம் மறந்த ஒரு பழக்கம் தோப்புக்கரணம். தொண்ணூறுகள் வரைக்கும் பிறந்த பெரும்பான்மையான குழந்தைகள் தோப்புக்கரணம் போட்டிருப்பார்கள். கால மாற்றத்தில் பெரியவர்கள் அதன் முக்கியத்துவம் தெரியாமல் பழக்கத்தை குறைக்க அது சிறியவர்களிடமும் குறைந்து போனது, பழக்கமும் மறைய ஆரம்பித்து விட்டது.