'நகரத்தார் சிந்தனைகள்' என்னும் இந்நூலில் நாட்டுக்கோட்டை நகரத்தார் பெருமக்களின் எளிய, நெறியோடு கூடிய வாழ்க்கை முறையைச் சிறிய கட்டுரை வடிவில் எளிமையாக எழுதியுள்ளார் நூலாசிரியர் தேவநாவே அவர்கள். செட்டிநாட்டுப் பகுதி மட்டுமல்லாது, தமிழகம் எங்கும் நன்கு அறிமுகமான இந்நூலாசிரியர் தேவநாவே அவர்கள் முதுபெரும் பேராசிரியர். ஆழ்ந்த இறை நம்பிக்கை உடையவர். ஆன்மிக இலக்கியங்களில் ஆழம் கண்டவர். 'சித்தாந்த ரத்தினம்' என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர்.