உலகியல் இன்பங்களின் மீது நாட்டம் செலுத்தாமல் ,இறை கருணை அருளும் தேனினும்
இனிய திருவருளின் கருணையை பெறும் செயல்கள் மீது நாட்டம் கொள்ள வேண்டும்
என்று நமக்கு உணர்த்தி அருளுகிறார். வசந்த கால மன்மதனது மலர்க்கணை மனமாகிய இடங்களை பிளந்திட, சந்திரனும்
சுடுவதை எண்ணாமல் , மானினது பார்வையானது , நிலைபெற்ற பார்வையையுடைய
பெண்களது வஞ்சனையிடத்து சிக்கி , மதிநாளுடைப்பட்ட தயிரைப்போல கலங்கித் தேன்
போலும் இனிமைத் தன்மை தங்கிய திருவருளை என்னிடத்துச் செய்த என்
சிவபெருமானது சிவபுரத்திற்குள் நுழையப் போகின்றிலேனாகி, உடம்பில் பிராணனை
(வைத்துப்) பாதுகாக்கும் நிமித்தம் இன்னமும் உண்டும் உடுத்துமிருந்தனன்