1948ஆம்
ஆண்டு திருவாரூர் மாவட்டம் குடவாயிலில் பிறந்த இவர் கும்பகோணம், அரசர்
கல்லுாரியில் பி.எஸ்சி விலங்கியலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ.
வரலாறும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்ஃபில் வரலாறும், தமிழ்ப்
பல்கலைக் கழகத்தில் பி.எச்டி கட்டடக்கலையும் பயின்றவர். இதுவரை 25க்கும்
மேற்பட்ட நூல்களும் 300க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் படைத்தவர்.
இந்திய மற்றும் பன்னாட்டு கருத்தரங்கங்களில் பங்கேற்றவர். இவரது நூல்களுள்
குறிப்பிடத்தக்கவை நந்திபுரம், சோழமண்டலத்து வரலாற்று நாயகர்களின்
சிற்பங்களும், ஓவியங்களும், தஞ்சை நாயக்கர் வரலாறு, திருவாரூர்
திருக்கோயில், இராஜராஜேச்சரம். தஞ்சாவூர் மற்றும் தாராசுரம் ஐராவதீசுவரர்
திருக்கோயில் என்பவையாகும்.சிறந்த நூல் படைப்பிற்கான தமிழக அரசின் பரிசுகளை
இருமுறையும், தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசினையும், தமிழ்ப்
பேராயத்தின் ஆனந்த குமாரசுவாமி கவின் கலை விருதினையும் பெற்றவர்.