குடவாயிற் கோட்டம் என்னும் ஊரில் சிறைச்சாலை ஒன்று இருந்தது. சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும், சோழன் செங்கணானுக்கும் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் போர் நடைபெற்றது. போரில் கணைக்கால் இரும்பொறை சிறைபிடிக்கப்பட்டான். குடவாயிற் கோட்டத்துச் சிறையில் அடைக்கப்பட்டான்.