வாழ்க்கையில் வெற்றி பெற என்ன வழி என்று பல புத்தகங்கள் பார்த்திருப்போம், வாழ்க்கை என்ன பரிட்சையா அல்லது போட்டியா, ஏன் வெற்றி பெற வேண்டும். வாழ்வின் வெற்றி என்பது என்ன? பொருள் சேர்ப்பதா? புகழடைவதா? அப்படி என்றால் மிகப்பெரும் பணக்காரர்கள் எல்லோரும் வெற்றி பெற்றதாக ஆகிவிடுமா? புகழடைந்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்கள் எனில் மற்ற சாமான்னிய மனிதர்கள் எல்லோரும் தோல்வி அடைந்தவர்களா? புகழின் உச்சியில் இருப்பவர்க்கும் வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருப்பதை நாம் கேள்விபட்டிருக்கிறோம். ஏழு தலைமுறைக்கும் பணம் சம்பாதித்து பொருள் சேர்த்தவர்களும் வாழ்வில் ஏதோ நிறைவின்மையை உணர்கிறார்கள். இது எதனால்? பொருள் சேர்த்த செல்வந்தர்கள் வெற்றி பெற்றுவிட்டதாக ஆகும் ஆனால் அவர்கள் ஏன் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.