ஒரு முறை பெரிய மனிதர் ஒருவர் தன் பக்கத்து வீட்டு நபரைப்பற்றி அவன் ஒரு திருடன் என்று தவாறாக அனைவரிடமும் சொல்லி வந்தார். இதன் விளைவாக அந்த மனிதர் கைது செய்யப்பட்டார். அதானால் சிறைவாசமும் சென்றார். சிறிது நாள் கழித்து அவர் திருடர் இல்லை என்று நிருபிக்கப்பட்டது. இதனால் பக்கத்து வீட்டு நபர் அந்த பெரிய மனிதர் மீது வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் அந்த பெரியமனிதர் நான் சும்மாதான் சொன்னேன் என்று சொன்னார். நீதிபதி அந்த பெரியமனிதனிடம் "நீ அவரைப்பற்றி சொன்னது அனைத்தையும் ஒரு தாளில் எழுது என்று சொன்னார். வீட்டிற்கு செல்லும் போது அதை துண்டுதுண்டாக கிழித்து எறிந்து விட்டு போஇ நாளை வா நான் தீர்ப்பு சொல்கிறேன் என்று சொன்னார். மறுநாள் அந்த பெரியமனிதாரிடம் நீதிபதி சொன்னார் "நான் தீர்ப்பு சொல்வதற்கு முன்பு நேற்று நீ துண்டுதுண்டாக கிழித்த தாளை எடுத்துக் கொண்டு வா என்று சொன்னார். அதற்கு அந்த பெரியமனிதர் "எப்படி அதை பொறுக்கிவருவது இந்நேரம் காற்று பல இடங்களில் அதை அடித்துச் சென்றிருக்கும்இ நான் கண்டுபிடிப்பது என்பது இயலாத காரியம் என்று சொன்னார்.