பெரியார் கொட்டிய போர் முரசு என்ற நூலினை அறி முகம் செய்து, தலைமைக்கழக பேச்சாளரும், வழக்குரைஞரு மான பூவை. புலிகேசி உரையாற்றும் போது, பெரியார் தமி ழுக்கும், தமிழர்களுக்கும் என்ன செய்தார் என்று கேட்பவர் களுக்கு சரியான பதிலடியாக இந்த புத்தகம் உள்ளது. அதை இன்றைய தலைமுறை இளைஞர்களும், மாணவர்களும் படித்து உள்வாங்க வேண்டும். ஆசிரியர் அவர்கள் பல்வேறு எடுத்துக்காட்டுகளை கூறி மிக அற்புதமாக இன்றைய தேவைக்கேற்ப இந்த புத்தகம் வெளி வந்திருப்பது மகிழ்ச்சி என்று அவர் பேசினார்.
ஜாதி ஒழிப்பு புரட்சி, பெரியார் கொட்டிய போர் முரசு ஆகிய நூல்களை தமிழர் தலைவர் கி.வீரமணி வெளியீட பொதுக்குழு உறுப்பினர் தி.மகாலிங்கம், பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளர் ஞான.செபஸ்தியான், பொதுக்குழு உறுப் பினர் கணபதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேலும் இயக்க தோழர்கள், நிருவாகிகள், கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர்