பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்கள் இந்த மாறும் உலகிலும் தங்கள் சிறுகதைத் திறமையை விட்டுவிடாமல் எழுதிக் கொண்டிருப்பது எப்போதாவது சக்கரம் திரும்பி மீண்டும் சிறுகதைகளுக்கு மவுசு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கலாம். யதார்த்தமான பாத்திரப் படைப்புகளை தெளிவான, ஆரவாரமில்லாத நடையில் தந்திருக்கிறார். தொலைகாட்சி, சினிமா போன்ற முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகரமாக இன்று இயங்குவதற்கு ஆதார காரணம் அவர் தனது சிறுகதைத் திறமையை இழக்காததுதான்.
- சுஜாதா