நம் தாய்மொழியாம் தமிழை நாம் அனைவரும் பிழையின்றி எழுதவும், பேசவும் அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாத கடமையாகும். நம் தமிழ், தொன்மையான இலக்கண, இலக்கிய வளங்களைப் பெற்ற, உயர்தனிச் செம்மொழியாகத் திகழ்வது. இதனை, இவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வரம்புகளைத் தன்னகத்தே கொண்டது. பிழையின்றி எழுதுவதற்கு, அடிப்படை இலக்கணமாவது தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அத்தகைய இலக்கணத்தை எளிமையாக இந்நூல் மூலம் கற்றுக்கொள்ளலாம்.