யோகாவை பலர் உடல் வளைதல், திரும்புதல், நீட்டுதல், மூச்சினை உள்ளிழுத்தல்
வெளிப்படுத்துதல் போன்ற உடற்பயிற்சி என கூறுவர். ஆனால் யோகா என்பது மனித
மனதால் ஆன்மாவின் சக்தியை அதிகரிக்க துாண்டும். நாம் எப்படி வாழவேண்டும்
என்ற வாழ்வியல் முறையை எடுத்துரைக்கும்.குறிப்பாக, பெண்கள் ஆசனங்கள்
செய்வதால் அவர்களின் உடலை ஆரோக்கியமாக வைப்பதுடன் மனதையும் அமைதிப்படுத்தி
மனஅழுத்தத்தை குறைத்து நிதானமாக செயல்பட உதவும். பெண்களுக்கு பொதுவாக
வீட்டிலும், அலுவலகத்திலும் ஏற்படும் மனஅழுத்தத்தை போக்க இது ஒரு நல்ல
தீர்வு.இத்துடன் உடல் பருமன், மாதவிடாய் கோளாறு, தைராய்டு, மன அழுத்தம்
போன்ற பலவித நோய்களிலிருந்து விடுபட யோகா பங்கு வகிக்கிறது.வனிதா, யோகா
பயிற்சியாளர்