ஆரோக்கியத்தின் ஆணிவேர் நாம் சாப்பிடும் உணவில்தான் இருக்கிறது. கடந்த
கால்
நுாற்றாண்டு காலமாக, நாகரிகச் சூழல் வளர வளர நம் உணவுமுறை மாறிக்கொண்டு
வருகிறது. இந்தியப் பாரம்பரிய உணவுகள் இருந்த இடத்தில், மேற்கத்திய உணவுகள்
குடிபுகுந்துவிட்டன. உடல் சத்துக்காக சாப்பிட்ட காலம் போய் நாக்கின்
சுவைக்காக சாப்பிடுவது என்றாகி விட்டது.
துரித உணவுகள், பாக்கெட்
உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடிமேட் உணவுகள் என்று பலதரப்பட்டவை
சாலையோரக் கடைகள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை விற்கப்படுகின்றன.
புரோட்டா, நாண், நுாடுல்ஸ், ப்ரைடு ரைஸ், ருமாலி ரொட்டி, தந்துாரி சிக்கன்
என இதுவரை நகர மக்களை மட்டுமே வசீகரித்து வந்த துரித உணவு மோகம் இப்போது
கிராமங்களிலும் காணமுடிகிறது. இது ஒட்டு மொத்த இந்தியர்களின்
ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.
தேசிய சத்துணவு வாரம் கொண்டாடப்படும் இந்த வேளையில், இந்த எச்சரிக்கையை
எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.