திருமண வாழ்வில், குழந்தைகள் வளர்ப்பில், வேலை அழுத்தம், திடீர் மாற்றங்கள், இழப்புகள், கொடுமைப்படுத்தல், குடிபழக்கம் இப்படி வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்கொள்ளும்போது நம் மனநிலை தடுமாறக்கூடும். இவற்றிலிருந்து வெளிவருவது எப்படி? வெளிவர யாராவது நமக்கு உதவுவார்களா? இதற்கு இப்புத்தகத்தில் விடையளிக்கிறார் மனநல ஆலோசகர் மாலதி சுவாமிநாதன், தன் 40 வருட அனுபவத்திலிருந்து சிலரின் மனநலப் பயணங்களை விவரித்தல் மூலமாக.