கம்பர் யார்? இக்கேள்விக்கு விடையளிப்பதே இந்நூலின் நோக்கமாகும்.கம்பர் தமிழர்; கற்றிந்த மேதை; உலகியல் அறிவிற் சிறந்தவர்; தன் காலத்திற்கு முன்பு தோன்றிய சங்க நூல்களையும் சமயநூல்களைய்ம் பழுதறக் கற்ற பண்டிதர்; பல்கலைப் புலமை நிறைந்தவன் அரசியல் நுட்பம் வாய்ந்தவர் மக்கள் பேற்றிலும் திளைத்தவர் இவ்வாறு கல்வியிலும் உலகியல் அறிவிலும் எல்லா நலத்துறைகளுலும் சிறந்த தமிழர் கம்பர் என்பதை விளக்குதலே இந்நூற் கட்டுரைகளின் நோக்கமாகும்.