நண்பர் மருதூர் அரங்கராசன் அவர்கள் அரிதின் முயன்று ஆக்கிய தமிழில் மரபுத் தொடர்கள் என்ற நூலைக் காணும் வாய்ப்பு பெற்றேன் உலகில் உள்ள மொழிகள் எல்லாம் அவை உயர்தனிச் செம்மொழியாக இருப்பினும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய மொழிகளாக இருப்பினும் மரபுச்சொற்களைப் பெற்றுத் திகழ்தலைக் காணலாம்.