மனுஷ்ய புத்திரனால் பல்வேறு சந்தர்ப்பங் களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சமூக, அரசியல் பண்பாட்டு பிரச்சினைகளில் அவரது தீவிரமான அபிப்ராயங்களை முன்வைப்பவை. காதல், கலப்புத் திருமணங்கள், ஊடகங்கள், ரியாலிட்டி ஷோ, பதிப்புத்துறை, குழந்தைகள் உலகம் என வெவ்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கமல்ஹாசன், ரஜினி காந்த், மு.க.ஸ்டாலின் போன்ற வெகுசன ஆளுமைகளுடன் சுஜாதா, சுந்தர ராமசாமி, நகுலன் போன்ற படைப்பாளிகள் குறித்தும் ஆழமான மனப்பதிவுகளை இந்நூலில் உள்ள கட்டுரைகள் முன்வைக்கின்றன.